உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி மயக்கம்

உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி மயக்கம்

மருத்துவமனைகளில் சிகிச்சை 

உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி மயக்கம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா புகைப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களாக தொடரும் இந்த பாதிப்பால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த எறையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் புகைப்பட்டி பகுதியில் முகாமிட்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வாந்தி பேதி பாதிப்புக்கான காரணம் குறித்து குடிநீர் பரிசோதனை செய்து வருகின்றனர். சாக்கடை கால்வாய் கழிவுநீர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, ப்ளீசிங் பவுடர் தெளித்து சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story