திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து

திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து

திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் குடிசை வீட்டில் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலுப்பூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமஸ் இவருக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று திடிரென தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கூறை வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

Tags

Next Story