மாமல்லபுரத்தில் சுதைச்சிற்ப கலையம்ச திருக்குறள் பீடம் அமைப்பு

மாமல்லபுரத்தில் சுதைச்சிற்ப கலையம்ச திருக்குறள் பீடம் அமைப்பு

திருக்குறள் பீடம் அமைப்பு

மாமல்லபுரத்தில் சுதைச்சிற்ப கலையம்ச திருக்குறள் பீடம் அமைக்கபட்டுள்ளது.

தமிழக கலை, பண்பாட்டுத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி இயங்குகிறது. இங்கு, மரபு கட்டடக்கலை, கல், உலோகம், மரம், சுதை சிற்பக் கலைகள், ஓவியக்கலை ஆகிய பட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இங்கு பயில்வோரிடம், திருக்குறள் மற்றும் அதன் கருத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கருதி, சுதைச்சிற்ப திருவள்ளுவர் சிலையுடன், கலைநயத்துடன் வடிக்கப்பட்ட திருக்குறள் பீடம், கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லுாரி முதல்வர் ராமன் கூறியதாவது: மாணவர்களிடம் திருக்குறள் மற்றும் அவற்றின் கருத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தினமும் ஒரு திருக்குறள் எழுத முடிவெடுத்தோம். சிற்பக்கலை கல்லுாரி என்பதால், திருவள்ளுவர் சிலை,

முப்பாலை குறிக்கும் வகையில் சுதைச்சிற்ப கலையம்ச திருக்குறள் பீடம் ஆகியவற்றை அமைத்துள்ளோம். தினமும் திருக்குறளும், அதற்கான விளக்கமும் எழுதி வைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story