குண்டும், குழியுமான சாலையால் அவதி

குண்டும், குழியுமான சாலையால் அவதி

கடமலைபுத்தூரில் குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதிப்படும் நிலையில் தார் சாலை அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கடமலைபுத்தூரில் குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிப்படும் நிலையில் தார் சாலை அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட,கடமலைபுத்தூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற மேம்பாட்டு நிதியிலிருந்து தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது.. ஆனால் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக இந்த தார் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது..இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி செல்கின்றனர்.. இந்த கிராமப்புற சாலையினை சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடமும்,ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இப்பகுதியில் உள்ள இந்த சாலையினை ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் ஆய்வு செய்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story