ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதி

ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதி

 திண்டுக்கல் ரேஷன் கடைக்குள் மழைநீர் தேங்குவதால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் ரேஷன் கடைக்குள் மழைநீர் தேங்குவதால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ள DD 581-பொது விநியோக நியாய விலைக்கடை உள்ளது. இந்தக்கடைக்கு முன்புறம் உள்ள பொது இடத்தின் வழியாக மழைக்காலத்தில் மழை நீர் செல்லும் பாதையும் உள்ளது.இதற்கு அடியில் குடிநீர் குழாய் லைனும் உள்ளது.மழை காலங்களில் ஊரில் உள்ள மழை நீர் முழுவதும் இந்தவழி யாகத்தான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நியாய விலை கடைக்கு அருகில் உள்ள இடத்தில் தனியார் ஒருவர் சுவர் எழுப்பி ஆக்கிரமித்து உள்ளார். மேலும் அவர் மேடை அமைத் துள்ளதால் அந்த வழியாக மழை நீர் செல்லாமல் ரேஷன் கடைக்குள் செல்கிறது.

அங்குள்ள ரேஷன் பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி வருகிறது.இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

Tags

Next Story