பூந்தமல்லி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.


பூந்தமல்லி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் எதிர்ரபார்க்கின்றனர். பூந்தமல்லி பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, தினமும் ஏராளமான பயணியர் அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இங்கு இலவச குடிநீர் வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள கடைகளில் அதிக விலை கொடுத்து பயணியர் குடிநீர் வாங்கிச் செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் குமணன்சாவடி, கரையான்சாவடி ஆகிய பேருந்து நிறுத்தங்களில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story