வீரபாண்டியில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

வீரபாண்டியில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

போராட்டம் 

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வீரபாண்டியில் ஸ்மார்ட் மீட்டர் மின் திட்டத்தை கைவிடக் கோரி மின்வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி மின் வாரிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாநில தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய மின் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சார திட்டம் பறிக்கும் அபாய சூழ்நிலையை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story