நாட்றம்பள்ளி அருகே கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீ விபத்து 

நாட்றம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளிஅடுத்த சஞ்சீவினூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் இவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளார் கரும்பு அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது இதை குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் ரமேஷ் தலைமையில் விரைந்து சென்று சுமார் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர் கரும்பு தோட்டத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டார்களா?அல்லது புகைப்பிடித்து போட்டுவிட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story