நாசரேத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் துவக்கம்!

நாசரேத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் துவக்கம்!

கால்பந்து பயிற்சி 

நாசரேத்தில் மாணவர்களுக்கான கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் இன்று புதன்கிழமை துவங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு வருடந்தோறும் கோடை கால கால்பந்து பயிற்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கோடைகால கால்பந்து பயிற்சி இன்று புதன்கிழமை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. பயிற்சி துவக்க விழாவிற்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து பயிற்சியை துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் 4 ம் வகுப்பு முதல் 12 ம் வரை பயிலும் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். பயிற்சி தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கிறது. இந்நிகழ்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேத ராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உடற்பயிற்சி ஆசிரியர் தனபால், நசரேயன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story