சிவகாசி வழியாக கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு கோடை கால சிறப்பு ரயில்

சிவகாசி வழியாக கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு கோடை கால சிறப்பு ரயில்

சிவகாசி வழியாக கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


சிவகாசி வழியாக கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம் -திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக வாரம் இரு முறை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.இந்த ரயில் முழுமையான கால அட்டவணை மற்றும் நிறுத்தங்கள் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயில்கள் முழுமையான 16 எல் ஹெச்பி பெட்டிகளுடன் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.தாம்பரம் திருச்சி மதுரை விருதுநகர்,சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக மலைவழிப்பாதையில்இரு வழிகளிலும் இயக்கவுள்ளது.இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் வியாழன் சனிக்கிழமைகளில் இரவு 07.30 க்கு புறப்பட்டு ஞாயிற்றுக் கிழமை காலை 09.45 க்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை சென்றடையும்.திரும்பும்போது வெள்ளி ஞாயிறு தினங்களில் திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் பகல் 12.30 க்கு புறப்பட்டு சனி திங்கள் கிழமைகளில் காலை 04.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.மேற்காணும் தகவல்களின்படி இந்த ரயில்கள் 16/05/24 முதல் 29/06/24 வரை தாம்பரத்திலிருந்தும் 17/05/24 முதல் 30/06/24 வரை திருவனந்தபுரம் கொச்சுவேலி யிலிருந்தும் இயக்கப்படும்.இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.14 +2 மூன்றடுக்கு ஏசி எகானமி எல் எச் பி பெட்டிகளோடு இவை இயங்கும்.

Tags

Next Story