கோடைகால விளையாட்டு முகாம் நிறைவு

கோடைகால விளையாட்டு முகாம் நிறைவு

  காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.  

காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில், கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்., 29ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இப்பயிற்சி முகாமில் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பல்வேறு விளையாட்டுக்களில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு நேற்று நடந்தது. இதில், விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் ஆகியோர், விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விளையாட்டு பயிற்சி சீருடையை வழங்கி பாராட்டினர்.

Tags

Next Story