பெண்ணாடத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு

பெண்ணாடத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு

கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் 

பெண்ணாடத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் பெண்ணாடம் மனவளக்கலை மன்றம் மூலம் நடத்தப்படும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தினர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் யோகா பயிற்சி, எளிய முறை கணிதப் பயிற்சி, திருவருட்பா பயிற்சிகளை ஒரு வார காலத்திற்கு அளிக்க போகும் ஆசிரியர் சான்றோர்கள் , வள்ளலார் அறநிலையத்தினர் ஆகியோருக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு , உடனடி வினாடி வினா நடத்தப்பட்டு பேனா பரிசு வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story