சுந்தர குஜாம்பிகை ஓலை சப்பரத்தில் சுவாமி வீதி உலா

சுந்தர குஜாம்பிகை ஓலை சப்பரத்தில் சுவாமி வீதி உலா
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அச்சலிங்க சுவாமி கோயில் சித்திரை ஏக தின உற்சவ திருவிழாஓலை சப்பரத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் ஓலை சாப்பர விழா நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அச்சலிங்க சுவாமி கோயில் (கல்யாண சுந்தரர்) சித்திரை ஏக தின உற்சவ திருவிழாகடந்த 18ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது போய் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 23ம் தேதி இரவு ஓலை சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. கீழ வீதியில் உள்ள கோயில் வாசலான ஆர்ச்யில் இருந்து புறப்பட்ட ஓலை சப்பரம் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கோவில் வாசலை வந்தடைந்ததுஅதை தொடர்ந்து நாளை 25ஆம் தேதி சப்ஸ்தான பல்லாக்கு வீதி உலா காட்சி நடைபெறுகிறது. இதில் கல்யாண சுந்தரர் அம்பாள்சுவாமிகள் கீழ்வேளூர், அகர கடம்பனூர், கோயில் கடம்பனூர், திருக்கண்ணங்குடி, பட்டமங்கலம், வடக்காளத்தூர், தேவூர், இலுப்பூர், கூத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வீதி உலா காட்சி நடைபெறுகிறது.. 26 ஆம் தேதி கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயில் முன்புறமுள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது வரும் 28ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் பதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறு விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பணியாளர்கள், உபதாரர்கள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story