குளச்சலில் போலீஸ் தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

குளச்சலில் போலீஸ் தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
குளச்சல் அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய போலிஸ் அப்சர்வர்
கன்னியாகுமரி மாவட்டம்,குளச்சலில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் போலீஸ் அப்சர்வர் வைபவ் சந்திரகாந்த் என்பவர் நேற்று குளச்சல் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஏ எஸ் பி பிரவீன் கௌதம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுன் தேர்தல் பாதுகாப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் இலுப்ப விளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி சென்று வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சக்கர நாற்காலிகளில் சென்று வாக்களிக்க வசதியாக சாய்வு பாதை சீரமைக்கவும், வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நசீர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story