நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை

நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டவர்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் , குமாரபாளையம் அருகே பாறையூரில் வசிப்பவர் மாதேஸ்வரன், 58. குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர். இவர் நேற்று அதிகாலை 02:00 மணியளவில் வேலைக்கு செல்வதாக, வீட்டிலிருந்து மனைவி ராஜேஸ்வரி, 49, வசம் கூறி சென்றுள்ளார். 02:45 மணிக்கு போன் செய்து மனைவி கேட்ட போது டீக்கடையில் இருப்பதாக கூறியுள்ளார். காலை 06:00 மணியளவில் இவருடன் பணியாற்றும் கனகராஜ் என்பவர், ராஜேஸ்வரிக்கு போன் செய்து, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்க், பில்லரில் கயிற்றின் மூலம் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டிருப்பதாக கூற, நேரில் வந்து, அவரை அங்குள்ள நபர்களின் உதவியுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காட்டினர்.

இவரை பரிசோத்தித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபருக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இருப்பதாகவும். அதிக மன உளைச்சலில் வீட்டில் உள்ளவர்களிடம் சத்தம் போட்டு பேசி வருவதாகவும், தன்னால் வேலை செய்யமுடியவில்லை எனவும் கூறியதாக, மனைவி ராஜேஸ்வரி போலீசில் கூறியுள்ளார்.

Tags

Next Story