துறையூரில் துா்நாற்றமுடன் குடிநீா் விநியோகம்

துறையூரில் துா்நாற்றமுடன்  குடிநீா் விநியோகம்

பைல் படம் 

துறையூரில் கழிவு நீர் நிறத்திலும், துா்நாற்றமுடன் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனா்.
துறையூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் 13 ஆவது வாா்டுப் பகுதியில் உள்ள கீழக்குத்தி தெரு, மேலக்குத்தித் தெரு, ராஜா காலனி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மாா்ச் 22 -இல் அசுத்தமாக காவிரி குடிநீா் விநியோகம் செய்தனர். இந்நிலையில், இரண்டு வாரம் கழித்து சனிக்கிழமை வழங்கப்பட்ட காவிரிக் குடிநீா் கழிவு நீா் போல துா்நாற்றத்துடன் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். மேலும் இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தூய்மையான குடிநீா் மீண்டும் விநியோகம் செய்ய நகராட்சி நிா்வாகம் முன்வரவேண்டுமென அப்பகுதியினா் எதிா்பாா்க்கின்றனா்.

Tags

Next Story