பட்டுக்கோட்டை நூலகத்திற்கு மின்விசிறிகள் வழங்கல்

பட்டுக்கோட்டை நூலகத்திற்கு மின்விசிறிகள் வழங்கல்
மின்விசிறி வழங்கல்
வாசகர்களின் வசதிக்காக நூலகத்திற்கு மின்விசிறிகள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கிளை நூலகத்திற்கு மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை நூலகர் எம்.சுவாமிநாதன் தலைமை வகித்தார். நன்கொடையாளர் கே.தேவதாஸ் 5 மின்விசிறிகளை வழங்க, நூலகர் ஆ.ஜெயந்தி அதனைப் பெற்றுக் கொண்டார். மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து நன்கொடை வழங்கியவர்களைப் பாராட்டிப் பேசினார். இதில், ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.சக்திவேல், நிர்வாகிகள் பைசல் அகமது, முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, 'கதை சொல்லி' ஆனந்த் நன்றி கூறினார்.

Tags

Next Story