ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளிக்கு பல்லூடகப் பொருட்கள் வழங்கல்

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளிக்கு பல்லூடகப் பொருட்கள் வழங்கல்

பல்லூடகப் பொருட்கள் வழங்கல்

சிபிசிஎல் -சி பி ஆர் அன்பர்கள் நேசக்கரங்கள் அமைப்பின் சார்பாக ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளிக்கு பல்லூடகப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக்கு பல்லூடக பொருட்கள் வழங்கும் விழா. சிபிசிஎல் -சி பி ஆர் அன்பர்கள் நேசக்கரங்கள் அமைப்பின் சார்பாக ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளிக்கு பல்லூடகப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு அரசின் சார்பாக கணினி மற்றும் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் சிறப்பான கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் மாணவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் மதிப்பில் கணினி மற்றும் உபகரண பொருட்கள் சிபிசிஎல் சி பி ஆர் அன்பர்கள் நேசக்கரங்கள் சார்பில் திரு தி.ரமேஷ் குமார் அவர்கள் வழங்கினார்கள்.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு சி சிவா அவர்கள் தலைமையேற்றார்கள். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித் திட்ட அலுவலர் திரு. நீலமேகம் நாகப்பட்டினம் வட்டார கல்வி அலுவலர் திருமதி அன்பரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பாலசண்முகம் நன்றி கூறினார்.

Tags

Next Story