மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

தென்காசி அருகே மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
தென்காசி அருகில் உள்ள தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், முத்துமாலைபுரம் கிராமத்து வீட்டில் கட்டணமில்லா பயிலகம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் நாள்தோறும் பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னையைச் சேர்ந்த டாக்டர் மாலதி உதவியுடன், தோரணமலை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜீவா இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story