கைதிகளுக்கு நோட்டு, எழுது பொருள்கள் வழங்கல்

கைதிகளுக்கு நோட்டு, எழுது பொருள்கள் வழங்கல்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு பெற நோட்டு, எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு பெற நோட்டு, எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவின் பேரில், மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளை சிறையில் உள்ள எழுத, படிக்க தெரியாத 221 கைதிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க மாவட்ட உதவி இயக்குனர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு, சிறை சூப்பிரண்டு வினோத்திடம், நோட்டு, எழுது பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிறைப்பள்ளி ஆசிரியர்கள் ராஜ்மோகன்குமார், சுரேஷ், விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story