ஆவின் நிறுவனத்திலிருந்து தரமற்ற கெட்டுப்போன பால் விநியோகம் !

ஆவின் நிறுவனத்திலிருந்து தரமற்ற கெட்டுப்போன பால் விநியோகம் !
ஆவின் பால் 
ஆவின் நிறுவனத்திலிருந்து தரமற்ற கெட்டுப்போன பால் விநியோகம் மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏஜென்ட் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் உள்ள உமாசங்கர் என்பவர் ஆவின் பாலகம் ஏஜென்ட் எடுத்து நடந்து வருகிறார். இவர் ஆவின் நிறுவனத்தின் பால், தயிர், நெய், இனிப்பு வகைகளை ஆவினிடம் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களாக தினசரி ஆவின் நிறுவனத்திலிருந்து விடியற்காலை 2 மணிக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அரை லிட்டர் கொள்ளளவு ஏஜென்ட்க்கு வழங்கப்படுகிறது.

அதன் பின்னர்,வாடிக்கையாளர்களுக்கு பால் பாக்கெட் வாங்கி சென்று பால் காய்ச்சும் பொழுது திரிந்து விடுவதாக திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்று செல்கிறார்கள். இதனால் ஆவின் பால் ஏஜெண்டுகள் நஷ்டம் அடைய வேண்டிய நஷ்டம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து ஏஜென்ட் எடுத்துள்ள நபர் மாவட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தாலும் புகார் குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து ஆவின் பால் ஏஜென்ட் உமா சங்கர் கூறும் பொழுது தினசரி நான் விற்பனைக்காக 100 லிட்டர் பால் வாங்குகிறேன். இதில் 10 லிட்டர் பால் பாக்கெட் கிழிந்தே வருகிறது.மேலும், கூடுதலாக 10 லிட்டர் பால் பாக்கெட் கெட்டுப் போய் வருகிறது.இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாளிடம் தகவல் தெரிவித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஜென்ட்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story