சுரண்டையில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம் - இடங்கள் ஆய்வு

சுரண்டையில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம் - இடங்கள் ஆய்வு

முகாம் இடங்கள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளுக்கும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஜன.3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாம், சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில் உள்அரங்கம், கீழச்சுரண்டை குறிஞ்சி மயில் மண்டபம், வரகுணராமபுரம் இந்து நாடாா் திருமண மண்டபம், ஆலடிபட்டி சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த இடங்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, சுரண்டை நகராட்சி மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், தலைமை கணக்காளா் முருகன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

Tags

Next Story