சுரண்டை பள்ளிக்கு திமுக சாா்பில் கணினி வழங்கினர்

சுரண்டை பள்ளிக்கு திமுக சாா்பில் கணினி வழங்கினர்

சுரண்டை நடுநிலைப்பள்ளிக்கு திமுக சாா்பில் கணினி வழங்கப்பட்டது.


சுரண்டை நடுநிலைப்பள்ளிக்கு திமுக சாா்பில் கணினி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ஆா்.சி.நடுநிலைப் பள்ளிக்கு கலைஞா் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திமுக சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். திமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரன், நகர திமுக பொறுப்பாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் பள்ளி நிா்வாகி அல்போன்சா மேரி மற்றும் மாணவா்களிடம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினியை வழங்கினாா். பள்ளி நிா்வாகம் சாா்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பூல்பாண்டியன், சங்கரநயினாா், ஜேம்ஸ், வெள்ளத்துரை, காா்த்திக், முத்துசுப்பிரமணியன், கோமதிநாயகம், மாரியப்பன், சுதன்ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story