தாராசுரம் சந்தையில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் மறியல்

தாராசுரம் சந்தையில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் மறியல்

போக்குவரத்து பாதிப்பு 

கும்பகோணம் தாராசுரம் சந்தையில் வாகனங்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறி சந்தையில் இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 வீதமும், காா், பெரிய, சிறிய ரக சரக்கு லாரிகளுக்கு ரூ. 30 வீதமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய ஒப்பந்ததாரா் மாா்ச் 25 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றாா். இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று இரவு தாராசுரம் காய்கறி சந்தை வாயிலில் தங்களது வாகனங்களைக் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சி. சுதா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாநகராட்சி ஆணையா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story