சேலத்தில் கோவிலில் கண்காணிப்பு கேமரா உடைப்பு

சேலத்தில் கோவிலில் கண்காணிப்பு கேமரா உடைப்பு

காவல் நிலையம் 

கேமராக்களை உடைத்த மர்மநபர்கள் 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே அக்ரஹாரம் நாட்டாமங்கலம் அ.நா.மங்கலம் ஏரிபுதூர் பகுதியில் மாரியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த விஜய், சவுந்தர், பிரகாஷ், ஆகாஷ், சுபாஷ், சபரிநாதன் உள்பட 10 பேர் மீது காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story