பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா - ஆட்சியர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பதற்றுமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள இணைய வழி கண்காணிப்பு கேமராக்களை ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.
இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி, நத்தமேடு கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குசாவடி மையத்தில் (Web Streaming) இணையவழி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story