வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து உதவி தேர்தல் அலுவலர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜிகிரியப்பனவர் பாராளுமன்ற தேர்தல்- 2024க்கான சாமுண்டிபுரம் பாலமுருகன் நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியார் வீதி,எம் ஜி ஆர் நகர், சுமித. கே. ராமசாமி மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் பகவதி அம்மன் நகர், நேருவீதி, ஸ்ரீ மகேஷ் வித்யாலயா ஆகிய பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் குறித்து வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதி குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, உதவி ஆணையாளர் நிருவாகம் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story