குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்  ஆய்வு
முட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியை ஆய்வு செய்த கலெக்டர்
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியபகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சிக்குட்பட்ட மேலகடியப்பட்டிணம் கடற்கரை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் மீனவர்கள் இளைப்பாறும் நிழற்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டதோடு, அருகாமையில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தினை மேம்படுத்துவதற்கு துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கீழகடியப்பட்டணம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் மேலகடியப்பட்டிணம் பகுதியில் 60,000 கொள்ளவு கொண்ட நீர் தேக்க தொட்டியும், ரூ.28.65 இலட்சம் மதிப்பில் முட்டத்தில் 1 இலட்சம் கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டியும் நேரில் பார்வையிடப்பட்டது.

முட்டம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு சுகாதார நிதியின் கீழ் ரூ.56 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார மையத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story