காந்தி இர்வின் பாலம் சாலை அருகில் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

காந்தி இர்வின் பாலம் சாலை அருகில் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு
தலைமை செயலாளர் ஆய்வு
காந்தி இர்வின் பாலம் சாலை அருகில் 386 மீ.நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

இன்று (08.06.2024) தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-61, பூந்தமல்லி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தென்னக இரயில்வே துறையின் சார்பில் ரூ.5.50 கோடி மதிப்பில் காந்தி இர்வின் பாலம் சாலை அருகில் 386 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன்,

இணை ஆணையர் (பணிகள்) சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன் (பொது) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story