சாத்தங்குடி அய்யனார் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி பெட்டி ஊர்வலம்

X
சாமிபெட்டி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்
சாத்தங்குடி அய்யனார் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
திருமங்கலம் அருகே சாத்தங்குடி அய்யனார் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் விழா நடந்தது. சுவாமி ஆபரணங்கள் கொண்ட பெட்டியை அலங்கரித்து நறுமண பொருட்கள் பூசப்பட்ட பெட்டியை பூசாரிகள் சுமந்து ஊரில் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
இந்த விழாவிற்கு திருமங்கலம் சாத்தங்குடி கண்டுகுளம் உள்ளிட்ட கிராமத்தினர் பங்கேற்றனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story
