சுவாமி ரமணானந்தா குருபூஜை- பக்தர்கள் தரிசனம்

சுவாமி ரமணானந்தா குருபூஜை- பக்தர்கள் தரிசனம்

குருபூஜை 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுவாமி ரமணானந்தாவின் 3ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதை அடி அண்ணாமலை கிராமத்தில் ஓம் நகரில் நடைபெற்ற இந்த குரு பூஜையில் சுவாமி ரமணானந்தாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்த பூஜைகளை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்திவிஜயன் நடத்தினார். அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுவாமி பிர சாதம் வழங்கப்பட்டது. இதில் விழா குழுவைச் சேர்ந்த வி.ரகுநாதன், வி.ராமஜெயம், கே.உமாமகேஸ்வரி, எம்.கைலாஷ் மற்றும் யாழினி, சரண்யா, ரிஷ்வந்த், ரமணானந்தாவின் சீடர்கள் எம்.நடராஜன், சுவாமி நிர்விருதானந்தா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 20ந் தேதி சுவாமி ரமணானந்தாவின் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story