சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு பேரூர் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் விஜயகுமார், பி.கே.கோபால், இக்பால், நெடுஞ்செழியன், ஜெமினி, மனோகரன், செந்தில், நீலமேகம், சுப்பிரமணியன், அசோகன், ராமமூர்த்தி, சாதிக்பாட்ஷா, சிவா, மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story