விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர் கொண்டு நீச்சல் பழக பயிற்சி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நடத்தப்பட இருப்பதாகவும், நீச்சல் பழக பயிற்சி 12 நாட்கள் முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புக்கு -9751393412 நீச்சல் பயிற்றுநரை தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல் தொகுப்பு -01.04.2024 முதல் 12.04.2024, இரண்டாம் தொகுப்பு- 14.04.2024 முதல் 25.04.2024, மூன்றாம் தொகுப்பு- 27.04.2024 முதல் 08.05.2024, நான்காம் தொகுப்பு- 10.05.2024 முதல் 21.05.2024 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 23.05.2024 முதல் 03.06.2024 வரை வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story