அரசு பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி - மேயர் துவக்கி வைப்பு

ரோட்டரி சங்கம் சார்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
திருப்பூரில் நீச்சல் தெரியாததால் தமிழகத்தில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே அனைவருக்கும் நீச்சல் பயிற்சி கிடைக்கும் வகையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று 15 வேலம்பாளையத்தில் தொடங்கப்பட்டது.இதனை மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து நீச்சல் பயிற்சி அளிப்பதாக ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story