மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

நீச்சல் பயிற்சி

ஏப்ரல் 27 முதல் மே 08 வரை மூன்றாவது கட்ட பயிற்சி பெற விரும்புவோர் அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக சிறப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் ஏப்ரல் 01 முதல் 12 வரை முதற்கட்டமாக நிறைவு பெற்றது.

இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 25 வரையில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 27 முதல் மே 08 வரை மூன்றாவது கட்டமாகவும், மே 10 முதல் மே 21 வரை நான்காவது கட்டமாகவும் மற்றும் மே 23 முத ஜூன் 03 வரை ஐந்தாவது கட்டமாகவும் நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும்.

தினசரி காலை 6.00 மணி முதல் 07.00 மணி வரை, 07.00 மணி முதல் 08.00 மணி வரை, 08.00 மணி முதல் 09.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 05.00 மணி வரை, 5.00 மணி முதல் 06.00 மணி வரை நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். ஏப்ரல் 27 முதல் மே 08 வரை மூன்றாவது கட்ட பயிற்சி பெற விரும்புவோர் அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,416/- ஆகும். இத்தொகையினை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும். கோடை வெப்பத்தை தணிக்க மற்றும் இனி வருங்காலங்களில் நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தயாராவதற்கும்,

நீச்சல் கற்றுக் கொடுக்கும் (Learn to Swim) பயிற்சி முகாம் வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில், மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59/- செலுத்தி நீந்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அ.சிங்குதுரை (85086 41786)என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story