நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலையில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் முன்புள்ள ஊஞ்சலில் சக்தி மாரியம்மனை எழுந்தருள செய்தனர். பவுர்ணமி சிறப்பு சங்கல்பம் செய்து, குங்கும அர்ச்சனை, தீப வழிபாடு, சோடச பூஜைகள் செய்து வைக்கப்பட்டது. பரமசிவம் பூசாரி குழுவினர் தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் உற்சவம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story