விவசாய நிலம் வாங்க தாட்கோ கடனுதவி

விவசாய நிலம் வாங்க தாட்கோ கடனுதவி

மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி 

தாட்கோ' எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக, விவசாய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்க, மானியத்துடன் குறைந்த வட்டியில், வங்கியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்ட தொகையில், 50 சதவீதம் அல்லது 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர், 'தாட்கோ' இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் அல்லது 'தாட்கோ' மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்."

Tags

Next Story