பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

தாசில்தார் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூரில் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகரில் திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளபட்டாசு கடைகளில் கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.பட்டாசு அப்போது கடைகளில் உரிமம் புதுப்பிக்க ப்பட்டுள்ளனவா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா? எனவும் ஆய்வு செய்தனர். மேலும், தீயணைப்பு எந்திரம், தண்ணீர் பாக்கெட், மணல் பக்கெட், அவசரவழி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? எனவும் பார்வையிட்டார்.ஆய்வின் போது தீயணைப்பு நிலைய இயக்குனர் மதியழகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்த கோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரவீன் குமார், சுதா கர், கிராம நிர்வாக உதவியாளர்கள் வெங்கடேசன் உத்ரகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story