சீர்காழி அருகே ஒளிலாயத்தில் தைவான் நாட்டினர் வழிபாடு

சீர்காழி அருகே ஒளிலாயத்தில்  தைவான் நாட்டினர்  வழிபாடு

சீர்காழி அருகே ஒளிலாயத்தில் பக்தி பரவசம் பொங்க தைவான் நாட்டினர் வழிபாடு செய்தனர். 

சீர்காழி அருகே ஒளிலாயத்தில் பக்தி பரவசம் பொங்க தைவான் நாட்டினர் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் . சீர்காழி அருகே காரைட்டில், பிரசித்தி பெற்ற , ஓளிலாயம், 18 சித்தர்களின் பீடம் அமைந்துள்ளது. இங்கு, தமிழகம் மற்றுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட, பல்வேறு உலக நாடுகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து ,வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் உலக நன்மை வேண்டி, 18 சித்தர்கள் ஒளிலாயத்தில், சிறப்பு ருத்ர மகா யாகம் நடைபெற்றது.

இதில் சிவாச்சாரியார்கள், அருண் கணேஷ் குருக்கள் தலைமையில், 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகைகள் கொண்டும் ,48 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, ருத்ர மகா யாகம் நடைபெற்றது. ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும், 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த ருத்ர மகா யாகத்தில் ,தைவான் நாட்டை சேர்ந்த, வெளிநாட்டவர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு செய்தனர்.

Tags

Next Story