வேருடன் சாலையில் சாய்ந்த புளிய மரம்

வேருடன் சாலையில் சாய்ந்த புளிய மரம்

ஒட்டன்சத்திரம் அருகே பழமையான புளியமரம் ஒன்று பலத்த காற்றுக்கு வேருடன் சாலையில் சாய்ந்தது.


ஒட்டன்சத்திரம் அருகே பழமையான புளியமரம் ஒன்று பலத்த காற்றுக்கு வேருடன் சாலையில் சாய்ந்தது.
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் அத்திக்கோம்பை காளாஞ்சிபட்டி செல்லும் வழியில் இருந்த பழமையான புளியமரம் ஒன்று பலத்த காற்றுக்கு வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் முயற்சியில் ஜேசிபி மூலம் சாலையில் சாய்ந்து கிடந்த மரம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Tags

Next Story