பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து
ஞாயிறு தோறு ரத்து செய்யப்படும் ரயில்சேவைகள்.

தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடப்பதால் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை- - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், ரயிலில் செல்வோர்தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் குவிந்தனர்.

அதிக கூட்டத்தால் தாம்பரம் பேருந்து நிலையம், ஜி. எஸ். டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு வாரமாக, ஞாயிற்றுக்கிழமையில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் ரயில் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Tags

Next Story