தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா

தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.


சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.
சங்கராபுரத்தில், காரல் மார்க்ஸ் பிறந்தநாள், அயோத்திதாசர் பிறந்த நாள், உலக செவிலியர் நாள் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தமிழ்ப் படைப்பாளர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலநாதன் முன்னிலை வகித்தார். ராஜன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லெனின், டாக்டர் நெடுஞ்செழியன், வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன், ஆசிரியர் ராஜேந்திரன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் பேசினர். விழாவில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story