மேலவலம்பேட்டையில் தமிழ்த் திருவிழா

மேலவலம்பேட்டையில் தமிழ்த் திருவிழா

 திருவள்ளூா் தமிழ்பட்டறை மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கம் சார்பில் கருங்குழி, மேலவலம்பேட்டையில் தமிழ்த் திருவிழா நடந்தது.

திருவள்ளூா் தமிழ்பட்டறை மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கம் சார்பில் கருங்குழி, மேலவலம்பேட்டையில் தமிழ்த் திருவிழா நடந்தது.

திருவள்ளூா் தமிழ்பட்டறை மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து, செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி மேலவலம்பேட்டையில் தமிழ்த் திருவிழாவை நடத்தின.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்க மாநில தலைவா் இராம.குருநாதன் தலைமை வகித்தாா். மேலவலம்பேட்டை திருவள்ளூவா் தமிழ்ப்பட்டறை புலவா் தமிழ்நிலவன் வரவேற்றாா். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்க தேசியத் தலைவா் கோ.பெரியண்ணன், பொது செயலா் இதயகீதம் இராமானுஜம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட அனைத்திந்திய சங்க தலைவா் மா.க.சுப்பிரமணியன், செயலா் அ.ராஜேந்திரன், திருவள்ளூா் தமிழ்ப்பட்டறை பொருளாளா் சு.மணிமோகன், எழுத்தாளா் கோ.மாலினி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் தங்கவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து கவிதை போட்டி, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி இளம் படைப்பாளா்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எழுத்தாளா் சங்க நிா்வாகிகள், கவிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சங்கப் பொருளாளா் தமிழ்விரும்பி நன்றி கூறினாா்.

Tags

Next Story