மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு போயர் பேரவை கொடியேற்று விழா

மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு போயர் பேரவை கொடியேற்று விழா

கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள் 

மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு போயர் பேரவை கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு போயர் பேரவை சார்பில் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு, நலத்திட்டங்கள் வழங்கும் விழா சேலம் மேட்டுப்பட்டி போயர் தெருவில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் டி.கே.மூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசும் போது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போயர் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் சீர்மரபினருக்கு ஒரே சாதி சான்றிதழ் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு போயர் பேரவை சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டார். ராஜூ, ரவி, விஜயன், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் பெரியப் பொண்ணு, துணைத்தலைவர் ராஜா ஆகியோர் வரவேற்றனர். விழாவில், தலைமை ஆலோசகர் கந்தசாமி, துணை ஆலோசகர் ரங்கநாதன், சேலம் மாவட்ட செயலாளர் குப்புசாமி, துணை பொதுச்செயலாளர் பொன்னையன், இளைஞர் அணி துணை செயலாளர் பன்னீர் செல்வம், மாதேஸ்வரன், மருதமலை, பரமசிவம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story