தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மின்வாரிய அலுவலகத்தில் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மின்வாரிய அலுவலகத்தில் மனு
மனு கொடுக்கும் போராட்டம்
விருதுநகர் தலைமை மின் பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாய பம்ப் செட் வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் மாட்டும் திட்டத்தை தமிழக அரசு நிராகரித்திட வலியுறுத்தியும் ஏராளமான விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களில் உள்ள பம்ப் செட் வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்காதே எனக் கூறி ஒன்றிய அரசை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி மின்சாரத்தை அளவிடும் முறையை கைவிடக் கோரியும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story