பேராவூரணி காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு தமிழக அளவில் வெள்ளிப் பதக்கம் 

பேராவூரணி காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு தமிழக அளவில் வெள்ளிப் பதக்கம்  வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவல் துறையினருக்கு நடத்தப்பட்ட தமிழக அளவிலான போட்டியில், இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் டூட்டி மீட் - 2023 என்ற போட்டி தமிழ்நாடு காவல்துறை சார்பில், தமிழக அளவில் நடத்தப்பட்டது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பேராவூரணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் எம்.ராம்குமார் மாநில அளவில், (சயின்டிபிக் எய்ட்ஸ் டு இன்வெஸ்டிகேசன், கிரைம் இன்வெஸ்டிகேசன் - ரைட்டர்) என்ற குற்றப் புலனாய்வு பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார்.

8இதையடுத்து, அண்மையில் சென்னையில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், உதவி ஆய்வாளர் எம்.ராம் குமாருக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். விருது பெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு, உயர் அலுவலர்கள், சக காவலர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story