தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடனுதவி வழங்கும் முகாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடனுதவி வழங்கும் முகாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்  மூலம் வட்டார அளவிலான கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்  மூலம் வட்டார அளவிலான கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2024-2024 - ஆம் ஆண்டிற்கான கடனுதவி வழங்கும் முகாம் 02.07.2024 அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 03.07.2024 அன்று காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.07.2024 அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05.07.2024 திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.07.2024 சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 09.07.2024 இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.07.2024 திருவல்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11.07.2024 சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 12.07.2024 வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.07.2024 வத்ராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளன.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7மூ வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.2,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்டுகிறது.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/ திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது /செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story