தமிழக, ஒரிசா காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தமிழக, ஒரிசா காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

நாகையில் மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் ஒரிசா காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஒரிசா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

இக்கொடி அணிவகுப்பானது நாகை சி,எஸ்,ஐ பள்ளி மைதானத்தில் தொடங்கி முக்கிய பகுதிகளான, கீரை கொலை தெரு, சேவாபாரதி , டா,டா நகர் வழியே சென்று, அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது மேலும் இதில் ஒரிசா காவல்துறையினர், நாகை மாவட்ட தாலுகா காவல்துறையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர்,தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்,என சுமார் 300 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story