தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை துவக்கம் !

பிளஸ் 2 பொதுத் தேர்வு

பிளஸ் 2 பொதுத் தேர்வு

பிளஸ் 2 பொதுத் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 820 மாணவர்கள், 3 ஆயிரத்து 338 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 158 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 820 மாணவர்கள், 3 ஆயிரத்து 338 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 158 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அறை அனுமதி சீட்டுகள் (ஹால் டிக்கெட்) ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் தேர்வு எழுத மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று மாணவர்களின் பதிவு எண்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளில் எழுதி ஒட்டும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுக்கான பணியில் பறக்கும் படையினர், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், நிரந்தர பறக்கும் படையினர் என சுமார் 50 பேர் ஈடுபட உள்ளனர். முன்னதாக வினாத்தாள்கள் வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், எருமாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:- வினாத்தாள் அறையில் இருந்து காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் நுழைவு அனுமதி சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. அதை மாணவர்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளுக்கு செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. இதேபோல் தேர்வு எழுதும் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது தேர்வுகளை எழுதும், தேர்வுகள் விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக அடித்து விடும் நிகழ்வுகள் ஒழுங்கின செயலாக கருதப்படும். 47 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story



