போதை பழக்கத்தால் தத்தளிக்கும் தமிழகம் - பிரேமலதா குற்றச்சாட்டு

போதை பழக்கத்தால் தத்தளிக்கும் தமிழகம் - பிரேமலதா குற்றச்சாட்டு

பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் 

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கஞ்சா, மது போதையில் தமிழகம் தத்தளித்து வருவதாகவும், பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தத் தேர்தல் ஒரு மகத்தான மாற்றத்தை தர வேண்டும். அந்த மாற்றம் மட்டுமே தீர்வாக அமைய வேண்டும். கஞ்சா மது போதையில் தமிழகம் தத்தளித்து வருவதாகவும், பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், காவேரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story